July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி எமது இனத்தின் வெற்றியாகும்’

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி யாருடைய தனிப்பட்ட வெற்றியும் அன்றி, தமிழ் இனத்தின் வெற்றியாகும் என்று முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேரணியின் ஆரம்பத்தில் அரசியல்வாதிகள் வேண்டாம் என்று கூறப்பட்டதாகவும், பொத்துவிலில் பேரணி ஆரம்பமானபோது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்லவில்லையாயின் பொத்துவிலோடு முடிவடைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரணியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறை கூறுவது முறையல்ல என்றும் சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம் மக்களுக்கும் சிவாஜிலிங்கம் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.