May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டிஜிட்டல் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தும் பரீட்சார்த்த நடவடிக்கை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுடன் ஆரம்பம்!

இலங்கையின் விமான சேவையின் ஊடாக டிஜிட்டல் ( கடவுச் சீட்டுகளை பயன்படுத்தும் பரீட்சார்த்த நடவடிக்கையை சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் முன்னெடுத்துள்ளது.

இந்த பரீட்சார்த்த நடவடிக்கையை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் தெற்காசிய பிராந்தியத்தில் முன்னணி விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஷுடன் இணைந்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் ஆரம்பிக்க உள்ளது.

இது தமது நிறுவனத்தை ஆசியாவில் வாடிக்கையாளர்களின் கேந்திர மையமாக மாற்றுவதற்கான தொடக்கத்தை  குறிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டுகளை மேம்படுத்துவதற்கு இந்த டிஜிட்டல் சேவை வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. மேலும் பயணிகள் தங்கள் புகைப்படம் மற்றும் தகவலை வழங்கி டிஜிட்டல் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அத்தோடு, விமான பயணிகளுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள கொரோனா பரிசோதனை தகவல் மற்றும் ஆய்வக சேவைகளை பெற்றுக் கொள்ளவும் டிஜிட்டல் கடவுச்சீட்டு வசதிகளை வழங்குகின்றது.