May 10, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குடிவரவு – குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் கீழ்  உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உரிய பிரிவைத் தொடர்பு கொண்டு, ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டுப் பிரிவு – 070-7101060 , 070-7101070
குடியுரிமைப் பிரிவு – 070-7101030
வெளிநாட்டுத் தூதரகப் பிரிவு – 011-5329233, 011-5329235
விசா பிரிவு – 070-7101050
துறைமுகங்கள் பிரிவு – 077-7782505