May 10, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள மக்கள் குழப்பமடைய தேவையில்லை”; சுகாதார அமைச்சு

‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியின் 2வது டோஸை பெற்றுக் கொள்ள மக்கள் குழப்பமடைய வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

பல பகுதிகளிலும் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார்.

அத்தோடு, மேல் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு சுகாதார பிரிவுகளிலும் உள்ள ஒரு மருத்துவமனையில் ‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியின் 2வது டோஸை பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் ‘அஸ்ட்ரா செனிகா’  தடுப்பூசியின் 1 வது டோஸை பெற்றுக் கொண்ட 4 90,000 பேர் 2 வது டோஷுக்காக நீணடகாலமாக காத்திருந்தனர்.

இந் நிலையில் ஜப்பானில் இருந்து நன்கொடையாக 728,460 ‘அஸ்ட்ரா செனிகா’  கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நேற்று நாட்டை வந்தடைந்தன .

இந்நிலையில், மேல் மாகாணத்தில் முன்னுரிமை அடிப்படையில் ‘அஸ்ட்ரா செனெகா’ தடுப்பூசியின் 2வது டோஸை பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே  ‘அஸ்ட்ரா செனிகா’ இரண்டாவது டோஸ்களை செலுத்துவதற்காக மட்டும்  இன்று முதல் மேல் மாகாணத்தில் இயங்கும்   தடுப்பூசி மையங்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த தடுப்பூசி மையங்கள் வாரம் முழுவதும் செயல்படும் நிலையில்,  மக்கள் தடுப்பூசி அட்டைகள் மற்றும் அவர்களின் தேசிய அடையாள அட்டைகள் அல்லது கடவுச்சீட்டுகளை  காண்பித்து தடுப்பூசி ஏற்றிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தடுப்பூசி மையங்களின் பெயர் பட்டியலை இந்த லிங்கின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.