May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொவிட் -19 நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் உரிய நேரத்தில் கடுமையான நடவடிக்கை’; சுகாதார அமைச்சு

நாட்டில் நிலவும் கொவிட் -19 நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் உரிய நேரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசாங்கத்தால் முடிவு செய்யப்படும் என கூறிய அவர், சுகாதார அதிகாரிகள் நிலைமையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்த பிறகு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

நாடு தற்போது கொவிட் சூழ்நிலையை எதிர் கொண்டுள்ள அதேவேளை, பொருளாதாரம் மற்றும் சமூக அம்சங்களை சமநிலையாக அரசாங்கம் பேணி வருவதாகவும் வைத்தியர் ஹேரத் சுட்டிக்காட்டினார்.

எனினும் “கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் அல்லது நாடு முடக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உணர்ந்தால், தயக்கமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் வலியுறுத்தினார்.

அத்தோடு, மீண்டும் அறிவிக்கும் வரை பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.