May 28, 2025 3:22:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா எச்சரிக்கை: இலங்கை, இந்தியா உட்பட 5 நாடுகளில் இருந்து சவூதி அரேபியாவுக்கு பயணிக்க தடை

இலங்கை, இந்தியா உட்பட 5 நாடுகளில் இருந்து பயணிகள் சவூதி அரேபியாவுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருவதைக் கருத்திற்கொண்டு, சவூதி விமானப் போக்குவரத்து அதிகாரசபை இவ்வாறு தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியன ஏனைய நாடுகளாகும்.

சவூதி அரேபிய குடிமக்கள் மேற்படி நாடுகளுக்கு பயணம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா பிரஜைகள் குறித்த நாடுகளில் இருந்தால், அவர்கள் 72 மணி நேரத்துக்குள் நாட்டை வந்தடைய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.