May 14, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் மூன்று மாவட்டங்களில் கொரோனா தீவிரமாகப் பரவும் அபாயம்’: சுகாதார அதிகாரிகள் சங்கம்

இலங்கையின் மூன்று மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நாளாந்தம் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் பதிரன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்கள் மிக ஆபத்தானவை என்பதை சுட்டிக்காட்டியுள்ள பொது சுகாதார அதிகாரிகள் சங்கம், நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமை குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நிலையில், பொதுமக்கள் 100 வீதம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று உபுல் பதிரன கேட்டுக்கொண்டுள்ளார்.