June 1, 2025 23:52:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கு இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

இலங்கைக்கான இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவைச் சந்தித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தூதுக்குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இணைந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.