![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/Eu58VRoVkAIl-Xu.jpg?fit=1024%2C471&ssl=1)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே, அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரை, இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.
இம்ரான் கான் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.