May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருச்சி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 9 ஆவது நாளாகவும் தொடர்ந்து போராட்டம்

தமிழ்நாடு, திருச்சி மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் 9 ஆவது நாளாக இன்று (17) கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்  நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 ஈழத்தமிழ் அகதிகள் கடந்த 9 ஆம் திகதி புதன் கிழமை தங்கள் விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

இதன்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களது விடுதலை குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பில் அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை விசாரணை கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டவர்கள் நீதிமன்ற பிணையில் வந்தவர்களை கைது செய்து மேலும் சிறப்பு முகாமில் காலவரையறையின்றி எந்த விதமான நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாது அடைத்து வைத்திருக்கின்றார்கள்.

அத்தோடு தங்களுடைய விடுதலை தொடர்பில் இதுவரை தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள் தமக்குரிய விடுதலை கிடைக்கும் வரை தாம் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடரும் எனவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.