July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரியன்த குமாரவுக்கு நீதி கோரி பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பிரியன்த குமாரவுக்கு நீதி கோரி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரியன்த குமாரவின் உடற்பாகங்கள் இன்று மாலை இலங்கையை வந்தடையவுள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் சர்வ மதத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் 10 க்கு அதிகமான சிவில் அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளன.

பாகிஸ்தானில் மதத் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பிரியன்தவுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.