February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலஞ்ச குற்றச்சாட்டில் தெல்தெனிய நீதிமன்ற பதிவாளர் கைது!

இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் தெல்தெனிய நீதிமன்றத்தின் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் பெண் பதிவாளர் கடற்படை அதிகாரி ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த கடற்படை அதிகாரி மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்ச- ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.