May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். நாவலர் கலாசார மண்டப நுழைவாயிலில் நாவலரின் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் யாழ். மாநகர சபையின் உதவியுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட நாவலரின் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இன்று காலை 10.30 மணியளவில் இறைவணக்கத்துடன், நந்திக் கொடி ஏற்றப்பட்டு அந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் பிரதி மாநகர ஆணையாளர் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச்செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

‘பருவ கால மழை நீர் முகாமையும் திருக்கோவில் குளங்களும்’ எனும் தலைப்பில் சர்வராசா அவர்களின் சிறப்புரையும் இதன்போது இடம்பெற்றது.

This slideshow requires JavaScript.