July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டீ.ஏ.ராஜபக்‌ஷவின் 54ஆவது நினைவு தினம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தந்தை டீ.ஏ.ராஜபக்‌ஷவின் 54 ஆவது நினைவு தினம் தங்காலை, மஹவெலவில் நடைபெற்றது.

மஹவெலவில் அங்கு அமைந்துள்ள டீ.ஏ.ராஜபக்‌ஷவின் உருவச்சிலைக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தங்காலை வகேகொட புராதன வஜிரகிரிய விகாராதிபதி மிரிஸ்ஸே தம்மவங்ஷ தேரர் நிகழ்வில் அனுசாசனம் நிகழ்த்தினார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்‌ஷ, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செய்தனர்.