May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும்”: மனோ கணேசன்!

”விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த  அரசாங்கத்தையும் கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் வலியுறுத்தி பொகவந்தலாவையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தன. அந்நாடுகள் பொருளாதாரத்தை முகாமை செய்யவில்லையா? அப்படியானால் எமது நாட்டு அரசுக்கு மட்டும் ஏன் தடுமாற்றம்? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தேசிய உற்பத்தியில் புரட்சி செய்யப்போவதாக அறிவித்துவிட்டு மஞ்சளுக்கு தடை விதிக்கப்பட்டது. நாட்டில் தற்போது மஞ்சள் இருக்கின்றதா? பயறு, உளுந்து உள்ளிட்ட பொருட்களும் இல்லை. இந்தவிடயத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.