May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 6 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது 123 லீற்றர் மதுபானமும் 630 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மதுபானங்களை  கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் ஒரு செப்புத்தகடும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேடமாக மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்பில் 3 கிராம் 620 மில்லிகிராம் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது போதைப் பொருள் விற்பனையிலிருந்து பெற்றுக் கொண்டதாக கூறப்படும் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும், அலைபேசி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன்,மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரகம்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 02 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,வெரகம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோமதியகல பிரதேசத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சா சேனையை முற்றுகையிட்ட பொலிஸார், 12 ஆயிரம் கஞ்சா செடிகளை அழித்துள்ளனர்.

இதேவேளை,சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.