May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதைப் பொருள் கடத்தல்; ‘பொப் மாலியை’ கண்டுபிடிக்க உதவுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை!

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர் ‘பொப் மாலி’ தொடர்பில் தகவல் தெரிந்தவர்களை அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பேருவளை கடற்பரப்பில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம்திகதி 288 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த பொதைப் பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக அறியப்படும் படத்தில் காட்டப்பட்டுள்ள நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவரை தேடி சிறப்பு விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

‘பொப் மாலி’ என அழைக்கப்படும் குறித்த நபரின் பெயர் “களுதுர சமிந்த தாப்ரேவ்” எனவும் இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தந்துதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

சந்தேகநபர் குறித்த தகவல்களை பொலிஸ் போதைப் பொருள் பணியகத்தின் உதவிப் பணிப்பாளரின் 071-8592727 அல்லது 011-2343334 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.