
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 150 கிலோ கிராம் ஹெரோயின் வரை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் இருந்து இலங்கைக்குள் வந்த வெளிநாட்டு படகொன்றில் இருந்து கடற்படையினர் இந்த போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு கடற்படையினர் இந்த சுற்றிவளைப்பு வேட்டையை நடத்தியுள்ளனர்.
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஒன்பது வெளிநாட்டுப் பிரஜைகளை கொழும்பு துறைமுகத்துக்கு கடற்படையினர் அழைத்து வந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.