July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் புகலிடம் கோரும் ஆப்கான் ஊடகவியலாளர்களுக்கு உதவுமாறு ஊடக அமைப்புகள் கோரிக்கை

file photo: Twitter/ AJSC (Afghan Journalists Safety Committee)

இலங்கையில் புகலிடம் கோரும் ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்களுக்கு உதவுமாறு ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்கள் தொடர்பாக இலங்கை ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு ஊடக அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பல ஊடகவியலாளர்களுக்கும் தலிபான்களின் கீழ் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பல வருடங்களாகப் புகலிடக் கோரிக்கையாவார்களுக்கு இலங்கை பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில், ஆப்கான் ஊடகவியலாளர்கள் விடயத்தையும் கவனிக்க வேண்டும் என்று ஊடக அமைச்சுக்கான கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கான் பெண் ஊடகவியலாளர்கள் உட்பட பல ஊடகத்துறை சார்ந்த நிபுணர்களும் பாதுகாப்புத் தேடி நாட்டை விட்டு வெளியேறத் தயாராகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.