May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் : ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது

ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை (08) குறித்த பள்ளிவாசலில் தொழுகையின் போது இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் 50 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் 143 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிறுபான்மை ஷியா முஸ்லீம் சமூகத்தால் பயன்படுத்தப்படும் பள்ளிவாசலொன்றிலேயே இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த தாக்குதல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதன் பின்னர் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.