October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீடொன்றில் புதைத்து வைத்திருந்த 13.9 மில்லியன் ரூபா பணம் மீட்பு!

இலங்கையில் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய, தற்போது துபாயில் இருக்கும் சரித் சந்தகெலும் என்பவரின் உறவினர் ஒருவரின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கொட்டாவ கிரிப்பிட்டிய பகுதியில் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இந்த பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக 13.9 மில்லியன் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ரன்மல்லி என்பவரின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணம் போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்தது என்றும், சந்தேக நபர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில் அதனை பாதுகாப்பாக பொதி செய்து புதைத்து வைத்திருந்த நிலையிலேயே அது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.