May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பில் இராணுவ வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப் பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (25) பிற்பகல் 4 மணியளவில் கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடியை நோக்கி பயணித்த இராணுவ ரக் ரக வண்டி கறுத்தப் பாலம் அருகில் வேகக்கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வண்டியில் பயணித்த இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.