May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டன் வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை உயர் ஸ்தானிகர் நன்றி தெரிவித்துள்ளார்

பிரிட்டனில் உள்ள இலங்கையர்களுக்கு, இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.

வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போதே, அவர் பிரிட்டனில் உள்ள இலங்கையர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலுடன் இலங்கை பல்வேறு கஷ்டங்களுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும் பிரிட்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கம் சர்வதேசம் மற்றும் நலன் விரும்பிகளின் உதவிகளுடன் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், இலங்கையின் கஷ்டமான தருணங்களில் நாட்டுக்கு உதவி செய்த பிரிட்டன் வாழ் இலங்கையர்களை நினைவுகூர்ந்து, நன்றி தெரிவித்துள்ளார்.