May 14, 2025 22:35:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா பிற்போடப்பட்டது

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடத்துவதற்கு முன்னர் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று (08) காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.