May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் ஆலய திருவிழாவுக்கான கொடிச் சீலை வடிவமைப்பவர்களிடம் காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்திற்காக கொடிச் சீலை வடிவமைப்பவர்களிடம் காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு இன்று (03)இடம்பெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாண படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச் சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி  மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது.

அதற்கமைய நல்லூர் ஆலயத்தில் இருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாசார முறைப்படி பெருந் திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

கொடியேற்றத்துக்கான கொடிச் சீலையானது சிவஞான முதலியார் பரம்பரையில் கந்தையா தர்மகுலசிங்கம் என்பவரின் இல்லத்துக்கு சென்று ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் கையளித்தார்.

அதேவேளை, ஆலயத்தின் வருடாந்த திருவிழா  எதிர்வரும் 13 ஆம் திகதி வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.