May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் நடைபெற இருந்த அரச வெசாக் விழா இரத்து செய்யப்பட்டது

யாழ்.நயினாதீவு ரஜமகா விகாரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 2021 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் பிரதான விழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் மூன்றாவது அலையால இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் அரச வெசாக் வைபவத்தை வேறொரு இடத்தில் நடத்த திட்டமிடப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன குறிப்பிட்டார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை யாழ். நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் இடம்பெறவிருந்த நிலையில், கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மிக அமைதியான முறையில் தேசிய வெசாக் நிகழ்வை கொண்டாட தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.