April 29, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெல்லம்பிட்டியவில் 129 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

வெல்லம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 129 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (31) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, மீட்கப்பட்ட கஞ்சா தொகையுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் போதை பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், 37 வயதான சந்தேக நபர் தெமட்டகொட – வேலுவன பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஹம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 3 ஆயிரம் கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேக நபர் எம்பிலிபிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.