May 17, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பெருந்தொகை கேரள கஞ்சாவை கடத்தியவர்கள் வவுனியாவில் சிக்கினர்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சுமார் 1.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகளை கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்களை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கேரள கஞ்சா பொதிகளை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு – தெமட்டகொடவுக்கு கடத்த முயன்ற இருவரையும் நேற்றையதினம் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து  கைது செய்துள்ளனர்.

கெப்பிட்டிகொல்லாவ விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது காரினுள் பொதிசெய்து வைத்திருந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 43 ,48 வயதுக்குட்பட்ட கொழும்பு-தெமட்டகொட பகுதியில்  வசிப்பவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.