May 31, 2025 12:42:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மூன்றாவது நாளாகவும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்து பதிவாகியுள்ளது.

இன்று(வியாழக்கிழமை) 1,491 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 106,444ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 362 பேர்  பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 95,445 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 9,924 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 1,113 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

அத்தோடு நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 661 பேர் இதுவரை நாட்டில் உயிரிழந்துள்ளனர்.