July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜமைக்காவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப் பொருள் பொதி மீட்பு; ஒருவர் கைது

சீதுவ பகுதியில் உள்ள கூரியர் நிறுவனம் ஒன்றில்  நகைகள் அடங்கிய பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  95 கிராம் கொக்கெயின் போதைப்பொருள் சுங்க பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜமைக்காவிலிருந்து விமானத்தின் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்டு உரிமையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக சீதுவவில் கூரியர் நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

ஜமைக்காவிலிருந்து கொழும்பு நாரஹேன்பிட்டியில் வசிப்பவரின் முகவரிக்கு இந்த பொதி அனுப்பப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நாரஹேன்பிட்டியில் வசிக்கும் 44 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் ரூ .2.4 மில்லியன் மதிப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.