June 14, 2025 18:50:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீனும் அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு– 07, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் இருந்தும், ரியாஜ் பதியுதீன் வெள்ளவத்தை பிரதேசத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் இருவரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.