July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல்; புதிய சுகாதார அறிவுறுதல்களை வெளியிட்டது அரசாங்கம்!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும் கொவிட்- 19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்த புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார்.

புதிய வழிகாட்டல்கள் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் ஒரு வீட்டில் இருந்து இருவருக்கே வெளியில் செல்ல முடியும்.
  • பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்தின் போது, ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லல்.
  • அரச மற்றும் தனியார் பிரிவுகள் போதிய, குறைந்த ஊழியர்களுடன் வேலைகளைத் தொடர பணிப்புரை.
  • மாநாடுகள், பயிற்சிநெறிகள் மற்றும் கூட்டங்களை கட்டடத்தில் பங்கேற்கக்கூடிய தொகையில் 50 வீதமானோரது பங்குபற்றலுடன் நடத்துதல்.
  • அனைத்து விற்பனை நிலையங்களிலும் 1.5 மீட்டர் இடைவெளியைப் பேணி, சுகாதார வழிகாட்டல்களுடன் விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
  • பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.
  • மரணங்களின் போது, 25 பேரின் பங்கேற்புடன் இறுதிச் சடங்கை மேற்கொள்ளல்.
  • மத ஸ்தலங்களில் 50 பேருக்கு மாத்திரம் அனுமதியோடு, கூட்டு நடவடிக்கைகளுக்கு தடை.
  • பல்கலைக்கழகங்கள் உட்பட உயர் கல்வி நிலையங்களை முழுமையாக மூடுமாறு உத்தரவு.
  • தனியார் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கும் தடை.
  • பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை 50 வீத மாணவர்களுடன் நடத்த பணிப்புரை.