July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண சபைத் தேர்தல்; தொகுதியில் மூன்று வேட்பாளர்களை நிறுத்தும் யோசனைக்கு ஆளும் கட்சி இணக்கம்

மாகாண சபைத் தேர்தலில் ஒரு தொகுதிக்கு ஒரே கட்சியில் இருந்து மூன்று வேட்பாளர்களை முன்னிறுத்தும் யோசனைக்கு ஆளும் கட்சி பாராளுமன்ற குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஒன்றுகூடிய போது, இந்த யோசனைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மிலான ஜயதிலக முன்வைத்த யோசனையை, ஆளும் கட்சி உறுப்பினர்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அதுகோரல ஆமோதித்ததாக தெரியவருகின்றது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தைப் புறக்கணித்தவர்களும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.