June 16, 2025 20:00:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதை அனுமதிக்க முடியாது”: சாணக்கியன்

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு எந்தவகையிலும் எதிரானவர்கள் அல்ல ஆனால் எங்களுக்கு உரிமையும், அபிவிருத்தியும் வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பிரதேசசபை அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியென மக்களிடம் தரப்படும் விடயங்கள் அனைத்தும் பரிசளிப்பதாக மக்களுக்கு வழங்கப்பட்டாலும், அவை மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்தின் மூலமே அரசாங்கம் மேற்கொள்கின்றது.

இதனால் வேலைத்திட்டங்களை அரசாங்கமே மேற்கொள்கின்றது என நாங்கள் நினைக்க வேண்டிய தேவை இல்லை. இது எங்களின் உரிமை. இதை நாங்கள் கேட்டெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.