July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கும் தீர்மானத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியை நாங்கள் வரவேற்கிறோம். என தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு  எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

இதனிடையே அவர் பாராளுமன்றத்திலும் சிறப்புரை ஆற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவரின் விஜயத்தின் போது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக அனுமதியை வழங்கும்படி இலங்கை அரசை அவர் வலியுறுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டி சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.