October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி மன்னாரைச் சென்றடைந்தது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்து மன்னாரை சென்றடைந்தது.

இதன்படி பண்டார வன்னியன் சிலை அருகே வாகன பேரணியாகப் புறப்பட்டு பட்டாணிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் முன்பாக நடை பேரணி முன்னெடுக்கப்படும்.

இந்தப்பேரணி நெளுக்குளம், புவரசக்குளம், ஆகிய வீதிகளைக்கடந்து மன்னார் பரையநாளன் குளம் வீதியை சென்றடைந்தது.

மேலும் பேரணி மடுவீதியை வந்தடைந்த பின்பு மடுவ சந்தியிலிருந்து முருங்கன் ஊடாக மன்னார் நோக்கி சென்றுள்ளது.

குறித்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வமதத் தலைவர்கள், இளைஞர்கள், முஸ்லிம் மக்களும் ஊர்வலத்தில் இணைந்துள்ளனர்.

இதேவேளை பலத்த பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சோதனைச் சாவடிகளை தகர்த்தெறிந்து பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.