May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

300 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

மாரவில, துடுவாவ பிரதேசத்தில் 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சுமார் 300 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 100 கிலோ கிராம் ஹெரோயினும், 100 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருட்கள் தொடர்பான விசாரணைகளில் கிடைத்த தகவல்களுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, குறித்த போதைப்பொருட்கள் தொகை மீட்கப்பட்டுள்ளது.

காரொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த போதைப்பொருட்களை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

துடுவாவ பிரதேசத்தில் இருந்து லொறியொன்றில் மின்பிறப்பாக்கி இயந்திரமொன்றை ஏற்றி, அதனுள் மறைத்து சூட்சுமான முறையில் வேறு இடத்திற்கு போதைப்பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு ஆயத்தங்களை மேற்கொள்ளும் போதே, இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போதைப்பொருட்களைக் கொண்டுசெல்லப் பயன்படுத்திய 4 கார்களும், வான் ஒன்று மற்றும் லொறியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தப் போதைப்பொருட்கள் நாட்டுக்குள் எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை மதுவரித் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.