![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/fg.jpg?fit=600%2C444&ssl=1)
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்றுத் தர தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும் என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என கூறியுள்ளார்.
முன்னர் அ.தி.மு.க சரியாக ஆட்சி செய்யாததால் தான் மக்கள் தி.மு.க.வை தேர்வு செய்துள்ளனர் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் அகதி முகாமுக்கு வெளியே 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர சிறப்புக் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.