
தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நலன் குறித்த பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
‘தலைநிமிரும் தமிழகம்’ என்ற திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நலத்துறையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
தமிழக முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.