June 11, 2025 15:01:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புது டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு தற்காலிக பூட்டு

(photo : web/slhcindia.org)

புது டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவொன்றை விடுத்துள்ள உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தூதரகத்தின் அவசர சேவைகளை பெற்றுக்கொள்ள + 91-11-23010201 என்ற இலக்கத்திற்கு அல்லது slhc.newdelhi@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே கொரோனா பரவல் அதிகரிப்பால் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.