May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனைவிக்கு கொரோனா:தனிமைப்படுத்திக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் டெல்லி முக்கிய இடத்தில் உள்ளதுடன், அங்கு நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 23,686 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 240 உயிரிழந்துள்ளனர்.