
சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையே அமைதியின்மை தீவிரமடைந்து வருகிறது.
தமது வான் பாதுகாப்பு பரப்புக்குள் சீனாவின் போர் விமானங்கள் நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக ஊடுருவியுள்ளதாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சர் சூகூ செங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறான ஊடுருவல்கள் காரணமாக இரு தரப்பினரும் தவறுதலாக தாக்குதல்கள் நடத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 40 வருடங்களில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் அமைதியின்மை, தற்போது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டளவில் தாய்வானை முழுமையாக ஆக்கிரமிக்கும் வல்லமையை சீனா பெற்றுக்கொள்ளும் என தாய்வானின் பாதுகாப்பு அமைச்சர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
தாய்வான் போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களை நிர்மானிப்பதற்கு பல பில்லியன் டொலர்களை செலவிடுவதற்கான சட்டமூலம் தொடர்பாக கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.
தாய்வான் தன்னை இறையாண்மையுடைய அரசாக கருதுகின்ற போதிலும், சீனா அதனை தன்னிலிருந்து பிரிந்துபோன மாநிலமாகவே கருதுகின்றது.