July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்ப்பாட்டத்தில் பதட்டம்; இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனிய இளைஞன் பலி!

இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனிய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

15 வயதுடைய மொஹம்மட் ஹமாயல் என்ற இளைஞனே, இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

பலஸ்தீனின் நப்லஸ் நகரில் சட்ட விரோத குடியேற்றம் ஒன்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே, இஸ்ரேலிய இராணுவம் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளது.

நப்லஸ் நகரில் கலக நிலை ஏற்பட்டதாகவும், படையினருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- பலஸ்தீன் மோதல்கள் நிறைவுக்கு வந்து சில வாரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்ட விரோத குடியேற்றத்துக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டம் மீதான துப்பாக்கி சூட்டில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் பலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.