June 15, 2025 18:40:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாகிஸ்தானில் ஒன்பது நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் அமுல்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாகிஸ்தானில் ஒன்பது நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய பயணக் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நோன்புப் பெருநாள் முடிவடையும் வரை ஒன்பது நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, சுற்றுலாத்துறை சார்ந்த இடங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளைத் தொடர்ந்து கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் இம்முறை கட்டுப்பாடுகளுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.