July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்; இருவர் பலி

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மியன்மாரின் மன்டலாய் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மண்டலாயில் கப்பல்கட்டும் தளத்தின் முன்னால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர் இதன் போது இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரிட்டன் இந்த சம்பவம் குறித்து கவலை வெளியிட்டுள்ளது..ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான வன்முறைகளை படையினர் கைவிடவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியமும் இதனை கண்டித்துள்ளது.