February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸ் கட்டணங்களை மேலும் அதிகரிக்க முயற்சி!

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பஸ் கட்டணத்தை மேலும் அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் குறைந்தது 5 வீதமாவது பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் முதலாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலை 10 ரூபாவினாலும், சுபர் டீசல் விலை 62 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.