May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு!

மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கொவிட்-19’ தொற்றுக்கு எதிராக mRNA தடுப்பூசிகளை உருவாக்கியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும்.

அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வேயில் அறிவிக்கப்படும்.

https://x.com/NobelPrize/status/1708780262883017166?s=20