May 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகம் – யாழ்ப்பாணம் இடையே பயணிகள் கப்பல் சேவை!

தமிழகம் நாகப்பட்டினத்தில் இருந்து  இலங்கையின் காங்கேசன்துறை வரையில் பயணிகள் கப்பல் சேவையொன்றை நடத்த எதிர்பார்க்கப்பட்டள்ளது.

150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் சேவையை நடத்துவது தொடர்பில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்துள்ளார்.

துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து கப்பல் போக்குவரத்தினைத் தொடங்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.