October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விலைவாசி உயர்வுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று முற்பகல், யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .

”பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி, எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள் பொறுப்பாளிகளா? அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழிக்கிறாய்” போன்ற கோசங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.