July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் தெற்கு கடலில் 2509 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் 6 பேர் கைது!

250 கிலோ கிராம் போதைப்பொருளுடன் ஆழ்கடலில் பயணித்த வெளிநாட்டு மீன்பிடிக் கப்பலில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கடற்படையினர் சர்வதேச கடலில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கடற்படையினர் மீன்பிடிக் கப்பலில் இருந்த போதைப்பொருட்களை மீட்டு, கப்பலையும் கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

மீட்கப்பட்ட கப்பலையும் போதைப்பொருட்களையும் பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டுள்ளார்.

இலங்கையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான சயுர மூலம் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.